Saturday, December 31, 2011

தானே புயல் காட்டுமன்னார்கோவிலை தாக்கியது

0


காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த 80 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழையில் சாய்ந்து பாதிப்படைந்துள்ளன.

 தானே புயல் காரணமாக சிதம்பரத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பலத்தக் காற்றுடன் தொடர்ந்து மழை பெய்தது. இதில் டிஜிட்டல் பேனர்கள் சாய்ந்தன. சிதம்பரத்தை அடுத்த கிள்ளை, பரங்கிப்பேட்டை மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

 சிதம்பரம் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதையடுத்து இவற்றைச் சீரமைப்பதற்காக திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மின்வாரியப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கடவாச்சேரி பகுதியில் நள்ளிரவு மரம் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. இதை காவல்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு மேல் போக்குவரத்து சீரானது. இதேபோல் புதுச்சத்திரம் அருகே சாலையில் விழுந்த மரமும் பின்னர் அப்புறப்படுத்தப்பட்டது.

 20 ஆயிரம் குடிசைகள் சேதம்: சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் புயலால் 20 ஆயிரம் குடிசைகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சிதம்பரம் பகுதியில் குடிநீர் மற்றும் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது.

 சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். புயல் காரணமாக சிதம்பரத்தில் வியாழக்கிழமை ஹோட்டல்கள் திறக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் உணவு கிடைக்காமல் சிரமப்பட்டனர்.

 பல்கலைக்கழகத் தேர்வு ஒத்திவைப்பு: அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தின் தேர்வு அண்ணாமலை நகர் 2 மையங்கள், புதுச்சேரி ஒரு மையம், சென்னை 5 மையங்களில் நடைபெற இருந்தது. இத்தேர்வு புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம். ராமநாதன் தெரிவித்துள்ளார்.

 மாற்றுப் பாதையில் ரயில்கள்: சிதம்பரம் வழியாகச் செல்லும் மதுரை எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ் ஆகியவை விருத்தாசலம் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. திருச்சி-சென்னை விரைவு பாசஞ்சர் ரயில், விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாகச் செல்லும் ரயில் பாதையில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளதால் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறையில் இருந்து என்ஜினுடன் இணைக்கப்பட்ட ரயில் பெட்டியில் ரயில்வே ஊழியர்கள் சென்று ரயில் பாதையில் ஆங்காங்கே விழுந்துக் கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பரங்கிப்பேட்டையில் உள்ள ரயில்வே கேட் புயல் காற்றில் முறிந்து விழுந்தது.

 ÷நெற்பயிர்கள் சேதம்: சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் சுமார் 80 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்தன. இவை புயல் காற்றில் அடியோடு சாய்ந்துள்ளன. வடவாறு பாசனப் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர், வீராணம் ஏரி மற்றும் ராஜன் வாய்க்கால் பாசனம் பெறும் 10 ஏக்கர் மற்றும் சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் 60 ஆயிரம் ஏக்கர் உள்பட 80 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பயிர்கள் பதராகி விடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

 இது குறித்துக் கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்கத் தலைவர் பி. விநாயகமூர்த்தி கூறுகையில், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

 7 பேர் பலி: சிதம்பரம் பகுதியில் மழை மற்றும் குளிர் காரணமாக, பரங்கிப்பேட்டை அகரம் கலியபெருமாள்(55), கீரப்பாளையம் குப்புசாமி(55), தச்சங்காடு ராமன்(80), அரியகோஷ்டி கலியபெருமாள்(60), நஞ்சை மகத்துவாழ்க்கை சரஸ்வதி(65), சேந்திரக்கிள்ளை தில்லையம்மாள்( 70), செங்கல்மேடு பட்டுக்கண்ணு(75) ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

காட்டுமன்னார்கோவில் மருத்துவமனையில் பரபரப்பு

1

காட்டுமன்னார்கோவில்; சர்க்கரை நோய் மாத்திரை வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
 இங்கு  சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் குறிப்பிட்ட தினங்களில் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. கடந்த காலங்களில் வாரத்திற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய கிழமைகளில் வழங்கப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் தட்டுப்பாடு இன்றி மாத்திரைகளை வாங்கிச் சென்றனர். தற்போது பற்றாக்குறை ஏற்பட்டதால் செவ்வாய், வெள்ளி ஆகிய இரு தினங்கள் மட்டுமே மாத்திரைகள் தரப்படும் என்று  அறிவிக்கப்பட்டது.  இதனால் நோயாளிகள் மாத்திரைகள் வழங்கும் தினங்களில் அதிக அளவு கூடுகின்றனர். வரிசையில் நின்று வாங்கும் போது மாத்திரைகள் தீர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் ஒருவரை ஒருவர் தள்ளி முட்டி மோதி போட்டி போட்டுக் கொண்டு மாத்திரை வாங்க முற்படுகின்றனர்.

இதனால் ஒவ்வொரு வாரமும் மாத்திரைகள் வழங்கும் தினங்களில் மாத்திரை வழங்கும் இடத்தில் பரபரப்பும், பதற்றமும் நிலவும் ஏற்படுகிறது.
 தள்ளு முள்ளு சம்பவங்களால் வயதானவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே  மாவட்ட நிர்வாகம் மாத்திரைகளை தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

எம்.ஜி.ஆர் நினைவு நாள்

0

தமிழக முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளையொட்டி காட்டுமன்னர்கோயில் சட்டமன்ற அலுவலகம் அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.முருகுமாறன் B.Sc.,(Agri.) B.L., மலர்தூவி மரியாதை செலுத்திய போது எடுத்தபடம். அருகில் ஒன்றிய பெருந்தலைவர் எம்.கே. மணிகண்டம், பேரூராட்சி மன்ற தலைவர் எம்.ஜி. ஆர். தாசன், மற்றும் கழக பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பெரும்திரளாக கலந்துகொண்டனர்.

Sunday, December 18, 2011

திரு.என். முருகுமாறன் MLA நலத்திட்ட பணிகள்

1

ம. மேலவன்னியூர் அரசு (ஆ.தி.ந)மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான இலவச மிதிவண்டியை காட்டுமன்னர்கோயில் சட்டமன்ற உறுப்பினர் திரு.என். முருகுமாறன் B.Sc.,(Agri.) B.L., அவர்கள் வழங்கினர். அருகில் ஒன்றிய பெருந்தலைவர் திரு. கே.எ. பாண்டியன் உள்ளார்.

Thursday, December 15, 2011

எய்யலூர் கோயில் சிறப்பு...

1

சீதையைப் பிரிந்த ராமபிரான் அவள் கிடைப்பாளா என நம்பிக்கை இழந்திருந்த வேளையில், சொர்ணபுரீஸ்வரரை வழிபட்டு மீண்டும் நம்பிக்கை பெற்றார். பிரிந்த தம்பதியரை சேர்த்து வைக்கும் இந்த சிவன் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகிலுள்ள எய்ய<லூரில் அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு: ராமர், லட்சுமணர், சீதை மூவரும் காட்டில் பர்ணசாலை அமைத்து தங்கியிருந்தனர். ராவணன் சீதையை வஞ்சகமாகக் கடத்திச் சென்றான். மனைவியைப் பிரிந்த ராமன், அவளைத் தேடி அலைந்தார். தெற்குநோக்கி வரும்போது, ஓரிடத்தில் இறக்கை வெட்டப்பட்ட நிலையில் ஜடாயுவைக் கண்டார். புஷ்பக விமானத்தில் ராவணன் சீதையைக் கடத்திய செய்தியை கேள்விப்பட்டார். ஜடாயு சிறகினை இழந்த இடம் என்பதால் அவ்விடத்திற்கு "சிறகிழந்தநல்லூர்' என்ற பெயர் உண்டானது.
ராமனின் கண்ணில் பட்ட நாரை ஒன்றும், சீதை விமானத்தில் தெற்கு நோக்கிச் சென்ற செய்தியை ராமனுக்கு தெரியப்படுத்தியது. ராமனும் அந்த நாரைக்கு மோட்சம் கொடுத்து அருள்புரிந்தார். அவ்விடம் திருநாரையூர் ஆனது. சற்றுநடந்ததும், ஓரிடத்தில் புஷ்பகவிமானத்தில் சென்ற ஒரு பெண், தான் அணிந்திருந்த பூவினைத் தரையில் போட்டுச் சென்றதாகக் கூறி ராமபிரானிடம் சிலர் கொடுத்தனர். அவ்விடம் பூவிழந்த நல்லூர் ஆனது. பின்பு கடம்ப மரம் நிறைந்த காட்டுப்பகுதியான கடம்பூர், வேலமரங்கள் அடர்ந்த வேலம்பூண்டி வந்தனர்.
அங்கிருந்து, ஈச்சமரக்காடான ஈச்சம்பூண்டியைக் கடந்து சிறுகாட்டூர் அடைந்தனர். அங்குள்ள மக்கள், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், வெள்ளஅபாயம் நீங்கும் வரை அவ்வூரில் தங்கும்படியும் ராமலட்சுமணரை வேண்டினர். அவர்கள் ஆற்றங்கரையில் இருந்த சிவலிங்க பாணத்தின் மேலாக, வெள்ளநீர் செல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். நேரம் செல்லச்செல்ல வெள்ளஅபாயம் அதிகரித்தது. ஊருக்குள் தண்ணீர் வந்துவிடும் நிலைமை உண்டானது.
வெள்ளத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றவும், தண்ணீர் வற்றினால் தான் தங்கள் பயணம் தடையின்றி தொடரும் என்பதாலும் ராமபிரான்தன் வில்லை எடுத்து அம்பைத் தொடுத்தார். அதுகண்டு பயந்து போன கொள்ளிடம் ஆற்றின் வெள்ளம் கட்டுபட்டது, சிவலிங்கத்தின் அடிப்பகுதி வரை வெள்ளம் குறைந்தது.
பின், அங்கு கிடைத்த மலர்களைத் தூவிசிவலிங்கத்திற்கு ராமலட்சுமணர் பூஜை செய்தனர்.
சீதாதேவியை மீட்டு வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்று, சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டு நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர்ந்தனர்.
இழந்த நம்பியதை ராமர் மீண்டும் எய்தியதால் இத்தலம் "எய்யலூர்' என்றானது. தற்போது இப்பெருமான் "சொர்ணபுரீஸ்வரர்' என்ற திருநாமத்தோடு விளங்குகிறார்.
சிறப்பம்சம்: இவ்வுலக வாழ்வை சம்சார சாகரம் என்று சொல்வதுண்டு. இறைவன் ஒருவனே நமக்கு தோணியாக இருந்து கரை சேர்ப்பவர் என்ற உண்மையை எய்யலூர் சொர்ணபுரீஸ்வரர் உணர்த்துகிறார். பிரிந்த தம்பதியர் மீண்டும் சேர இவரை வழிபடுவது சிறப்பு. வேதனையில் தவித்த ராமன் இப்பெருமானை வழிபட்ட பின் ஆறுதலும், தெளிவும் பெற்றதாக ஐதீகம்.
திரேதாயுகத்தில் ராமன் வழிபட்ட மூர்த்தியானதால் புராதன மூர்த்தியாக சொர்ணபுரீஸ்வரர் திகழ்கிறார். திருமணம், குழந்தைப்பேறு, வியாபாரவிருத்திக்காக பக்தர்கள் இவரிடம் பிரார்த்தனை செய்கின்றனர். இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் ஜுன்19ல் நடக்கிறது.
இருப்பிடம்: சிதம்பரத்தில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள காட்டுமன்னார்கோயில் சென்று, அங்கிருந்து மேலக்கடம்பூர் வழியாக 12 கி.மீ.,கடந்தால் எய்யலூரை அடையலாம்.

Tuesday, March 29, 2011

ரவிக்குமார் அவர்களின் சாதனைகள்

0

குடிசை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகள்
சட்டமன்றத்தில் ஆற்றிய முதல் உரையிலேயே குடிசை வீடுகள் குறித்த பிரச்சனையை எழுப்பி, இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் குடிசைகள் அதிகம் உள்ள மாநிலம் என்பதையும் அதில் விழுப்புரம், கடலூர், நாகை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில்தான் குடிசைகள் அதிகமாக இருக்கின்றன என்பதையும் புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டி  தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தியதாலும்; 2007ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்ணுரிமை மாநாட்டில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூரை வீடுகளை காரை வீடுகளாக மாற்ற வேண்டும் என்று கோரியிருந்த்தாலும், தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு 21 இலட்சம் இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் முயற்சியினால் விளைந்த பயனாகும்.
நலவாரியங்கள்:
v நரிக்குறவர்களுக்கென்று தனி நல வாரியம் அமைக்கச்செய்தது.

v புதிரை வண்ணார் நல வாரியம் அமைக்கச்செய்தது.

v அரவாணிகளுக்கென்று தனி நல வாரியம் அமைக்கச்செய்தது.

v நாட்டுப்புறக் கலைஞர்களுக்கென்று தனி நல வாரியம் அமைக்கச்செய்தது.

v அரசு பதிவு பெற்ற பாரம்பரிய மருத்துவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்துத் தந்தது.

v வீட்டுப்பணியாளர்களுக்கென்று தனி நலவாரியம் அமைக்கச்செய்தது.

தலித் மக்களுக்கான நடவடிக்கைகள்:

v தலித் மக்கள் பெற்ற 85 கோடி ரூபாய்  தாட்கோ கடன்களை தள்ளுபடி செய்ய வைத்தது.

v பஞ்சமி நிலங்கள் மீட்புக்கு தனி ஆணையம் அமைக்க வழி வகை செய்தது.

v 10ஆண்டுகளான தொகுப்பு வீடுகளை சரி செய்ய ரூ 15,000 வழங்க வழி வகை செய்தது.

v இந்தியாவிலேயே முதல்முறையாக ஒவ்வொரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போதும் தாழ்த்தப்பட்ட மக்களின் சதவீத அடிப்படையில்  நிதி ஒதுக்கீடு செய்யும் சிறப்புக்கூறுகள் திட்டத்தை நடைமுறைப்படுத்தச் செய்து ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தலித் மக்களின் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வைத்தது.

v உள்ளாட்சித் தேர்தலில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தலித் மக்களுக்கான தொகுதிகளை உயர்த்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்து ஒரு நகராட்சி உட்பட 1300 க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்கள் கிடைப்பதற்கு வழி செய்தது.

v தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இப்போது முதல் தலைமுறையாக படிக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்கிற திட்டம் வருவதற்கு வழி வகுத்தது.

v சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு முறையாக நிதி ஒதுக்க வலியுறுத்தி அதை நிறைவேற்றச் செய்தது. இதனால் ஆண்டுக்கு சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும்

பொது நடவடிக்கைகள்:

v இசுலாமிய மக்கள் அதிக அளவில் ஈடுபட்டிருக்கும் எலும்புத்தூளால் உரம் தயாரிக்கும் தொழிலுக்கு வாட் எனப்படும் சேவை வரியிலிருந்து முழுமுற்றாக வரிவிலக்குப் பெற்றுத் தந்தது.

v ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு கோரிக்கை வைத்து நிறைவேற்றச்செய்தது.

v ஈழத்தமிழ் அகதிகளுக்கான பணக்கொடையை இரண்டு மடங்காக உயர்த்தியது.

v நாட்டுப்படகு மீனவர்களுக்கு மாதம் 300 லிட்டர்  மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க வழி வகை செய்தது.

v உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (Tank Operators) பணியாளர்களுக்கு ஊதியம் 1500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்த வைத்தது.

v அரசு தொழிற் கொள்கையை  உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உருவாக வழி செய்தது.

v மின்னணுக் கழிவு கொள்கையை  உருவாக்க வேண்டுமென்று வலியுறுத்தி, அதற்கான கொள்கையை உருவாக்க வழி வகை செய்தது.

v புவி வெப்பமயமாதல் ஆபத்தைக் குறைக்கவும், மின்சார பற்றாக்குறையைப் போக்கவும், அரசு அலுவலகங்களில்; குண்டு பல்புகளைப் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி, தற்போது அரசு அலுவலகங்களில் CFL குழல் விளக்குகள் பயன்படுத்த வழி செய்தது.

v பயிர் பாதுகாப்பில் கர்நாடக, ஆந்திர மாநிலங்களை ஒப்பிட்டுப் பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கச் செய்தது. அதுமட்டுமின்றி அந்த பயிர் பாதுகாப்புத் திட்டத்தில் வட்டம் பிளாக் என்பது அடிப்படை அலகாக வைக்கப்பட்டிருந்தது. அதை மாற்றி கிராமம் என்பதை ஒரே அலகாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அதையும் இன்று நடைமுறைப்படுத்த வழி செய்தது.

v இளைஞர்களுக்கு  திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதன் காரணமாக இன்றைய இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் ஆண்டு தோறும் 40 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

v நூலகங்களுக்கு வாங்கும் நூல்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரி தற்போது 1,000 படிகள் வாங்குவதற்கு வழி ஏற்படுத்தியுள்ளோம்.

v சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் வழிபட உரிமை கோரிய ஆறுமுக சாமி அவர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித் தொகை பெற்றுத் தந்தது.

தொகுதி நடவடிக்கைகள்:

v 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொகுதி மக்களின் கோரிக்கையான முட்டம், மணல்மேடு பாலத்தை அமைக்க வேண்டும் என்று வலியறுத்தி, அந்த பாலம் 65 கோடி ரூபாயில் அமைக்க ஏற்பாடு செய்தது. அதுமட்டுமல்லாமல் நாஞ்சலூர், கடவாச்சேரி ஆகிய இடங்களில் தலா 1 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

v தொகுதியில் இருக்கும் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் சாலை சிதம்பரம், புத்தூர் சாலை ஆகியவற்றை மாநில நெடுஞ்சாலையாக மேம்படுத்தியுள்ளது.

v தொகுதியில் இருக்கும் அனைத்து நடுநிலைப் பள்ளிகளையும் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தியது.

v அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு எமது சொந்த செலவிலே 40 மாணவர்களுக்கு கணினி வாங்கித் தரப்பட்டுள்ளது.

v ஏழ்மையான நிலையில் உள்ள 10  மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஐ.டி.ஐ. தொழிற்நுட்ப பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்தது.

v தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்படும் தொகுதி மக்களுக்கு நிரந்தரமாக நிவாரணம் ஏற்படுத்த கொள்ளிடம் பகுதியில் 115 கோடி ரூபாய் செலவில் கரையை உயர்த்துவதற்கும், வீராணம் ஏரியை ஆழப்படுத்தித் தூர்வாரச் செய்வதற்கும் பெரிய திட்டங்களை வகுக்கச் செய்து, நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

v வெள்ளியங்கால் ஓடை, மணவாய்க்கால் உள்ளிட்ட ஓடைகளையும் அகலப்படுத்தவும், கரைகளை உயர்த்தி, ஆழப்படுத்துவதற்கும் மிகப்பெரிய திட்டம் வகுக்க நடவடிக்கை எடுத்தது.

v திருக்கோயில்களை இணைத்து ஆன்மீகச் சுற்றுலா என்று மேம்படுத்துவதற்கு கோரிக்கை விடுத்து திருநாரையூர், திருமுட்டம் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களை மேம்படுத்தியது.

v தொகுதி மேம்பாட்டு நிதியில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் திருநாரையூர், நந்திமங்கலம் ஆகிய இடங்களில் தலா 26 லட்சம் ரூபாயில் வெள்ளப் பாதுகாப்பு மையங்களை உருவாக்கி இருக்கிறோம்.

v ரெட்டியூர், நாஞ்சலூர், கடவாச்சேரி உள்ளிட்ட இடங்களில் சமுதாய நலக் கூடங்களை அமைத்தது. குமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை உருவாக்கியது.

v நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 லட்ச ரூபாய் செலவில் அறிவியல் ஆய்வுக் கூடம் அமைத்தது. 5 லட்ச ரூபாயில் மாணவர்கள் உட்காருவதற்கு பலகைகள், பெஞ்ச், நாற்காலிகள் அமைத்தது.

v குமராட்சி அரசு மருத்துமனையை தரம் உயர்த்த வழிவகை செய்தது.

v மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக அரசு ஆதரவோடு சிறப்புப் பள்ளியை ஏற்படுத்தவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து தமிழகத்தில் அத்தகைய முதல் பள்ளி காட்டுமன்னார்கோயிலில் உருவாகச் செய்தது.

மேற்கண்ட சாதனைகள்  காட்டுமன்னார் கோயில் தொகுதி  மக்கள் எமது கட்சிக்கு அளித்த அங்கீகாரத்தினாலும் ஊக்கத்தினாலும் நிகழ்த்தப்பட்டவை. மீண்டும் தொகுதி மக்கள் வாய்ப்பளித்தால் இன்னும் பல வளர்ச்சிப் பணிகளை தொகுதிக்காகவும் கடலூர் மாவட்டத்துக்காகவும் தமிழக மக்களுக்காகவும் ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.
 
 

Wednesday, March 23, 2011

காட்டுமன்னார்கோவில் அ.தி.மு.க.வேட்பாளர் வரலாறு

0

 தொகுதி: காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி

கட்சி : அ.தி.மு.க.

பெயர் : என்.முருகுமாறன் 
 
வயது : 40 

கல்வி : பி.எஸ்சி. விவசாயம், பி.எல். 

சொந்த ஊர் : காட்டுமன்னார்கோவில் 
 
தொழில் : முன்னாள் அரசு ஊழியர் 

சமூகம் : ஆதிதிராவிடர் 

கட்சிப் பொறுப்பு : கடலூர் (மேற்கு) மாவட்ட துணைச் செயலாளர் 

குடும்பம் : 

மனைவி- நளினி,

மகன்கள்- ஜெயமுகில்வண்ணன், ஜெயமணிமாறன்

Saturday, March 12, 2011

காட்டுமன்னார்கோயில் வேட்பாளர் பட்டியல்

1

 விடுதலை  சிறுத்தைகளகட்சியின் காட்டுமன்னார்கோயில்   வேட்பாளரபட்டியலஇன்னுமஓரிரநாளிலவெளியாகுமஎன்றஅக்கட்சியினமாநிலசசெய்திததொடர்பாளரவன்னியரசதெரிவித்துள்ளா‌ர்.

ி.ு.க. அணியிலஇடம்பெற்றுள்விடுதலைசசிறுத்தைகளகட்சி, பேரவைததேர்தலில் 10 தொகுதிகளிலபோட்டியிஉள்ளது. அக்கட்சியினசார்பிலதேர்தலிலபோட்டியிவிரும்பி 1,025 பேரவிருப்மனஅளித்துள்ளனர். விருப்மனகட்டணமமூலமூ.52 லட்சமவசூலாகியுள்ளது.

தங்களததொகுதியிலகட்சியினதலைவராதொல்.திருமாவளவனபோட்டியிவேண்டுமெவிருப்பமதெரிவித்து, அவரதசார்பாக 122 பேரவிருப்மனஅளித்துள்ளனர்.

தொகுதிகளஇறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்களபட்டியலஓரிரநாளிலஅறிவிக்கப்படுமஎன்று வ‌ன்‌னியரசு வெளியிட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் தெரிவித்துள்ளார்.

காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி பார்வை

0


தொகுதி பெயர்

காட்டுமன்னார்கோவில் (தனி) 

தொகுதி எண் :

159 
 
அறிமுகம்

               காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி, கிழக்கு, தெற்கே நாகை மாவட்டமும், மேற்கே அரியலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களையும், வடக்கே புவனகிரி தொகுதியையும் எல்லையாக கொண்டு அமைந்துள்ளது. 

தனித்தன்மை :

               சீரமைக்கப்பட்ட இத்தொகுதியில் சிதம்பரம் தொகுதியிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சேர்க்கப்பட்டுள்ளது. இத்தொகுதியிலிருந்து அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 4 ஊராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை ஆகிய 3 பேரூராட்சிகளும், கீரப்பாளையம் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள், குமராட்சி ஒன்றியத்தில் 36 ஊராட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கி காட்டுமன்னார்கோவில் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. 

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் : 

பேரூராட்சிகள் :

3
ஸ்ரீமுஷ்ணம் - 15 வார்டுகள்
காட்டுமன்னார்கோவில் - 18 வார்டுகள்
லால்பேட்டை - 15 வார்டுகள் 

கிராம ஊராட்சிகள்

112கீரப்பாளையம் ஒன்றியம்: (21) 

               கூடலையாத்தூர், கலியமலை, கந்தகுமாரன், கானூர், காவாலக்குடி, கோதண்டவிளாகம், குமாரக்குடி, மழவராயநல்லூர், நந்தீஸ்வரமங்கலம், நங்குடி, பாளையங்கோட்டை (கீழ்), பாளையங்கோட்டை (மேல்), பேரூர், பூர்த்தகங்குடி, புடையூர், ராமாபுரம், சோழத்தரம், வடக்குப்பாளையம், வலசக்காடு, வட்டத்தூர், முடிகண்டநல்லூர். 


காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் :(55) 

                 ஆச்சாள்புரம், அகரபுத்தூர், ஆழங்காத்தான், அழிஞ்சிமங்கலம், அறந்தாங்கி, ஆயங்குடி, செட்டித்தாங்கல், ஈச்சம்பூண்டி, எசனூர், கள்ளிப்பாடி, கண்டமங்கலம், கண்டியாங்குப்பம், கஞ்சங்கொல்லை, கால்நாட்டாம்புலியூர், கருணாகரநல்லூர், கீழக்கடம்பூர்,கீழபுளியம்பட்டு, கொக்கரசன்பேட்டை, கொள்ளுமேடு, கொழை, கொண்டசமுத்திரம், குணமங்கலம், குணவாசல்,குஞ்சமேடு, குருங்குடி, கே.பூவிழந்தநல்லூர், ம.ஆதனூர், மதகளிர்மாணிக்கம், மா.மங்கலம், மானியம் ஆடூர், ம.உத்தமசோழகன், மேல்ராதாம்பூர், மேலகடம்பூர், மேல்புளியங்குடி, மோவூர், முட்டம், நகரப்பாடி, நத்தமலை, நாட்டார்மங்கலம், பழஞ்சநல்லூர், ராயநல்லூர், ரெட்டியூர், சித்தமல்லி, ஷண்டன், சிறுகாட்டூர், ஸ்ரீஆதிவராகநல்லூர், ஸ்ரீபுத்தூர், ஸ்ரீநெடுஞ்சேரி, தொரப்பு, டி.அருள்மொழிதேவன், தேத்தாம்பட்டு, திருச்சின்னபுரம், வானமாதேவி, வீராணநல்லூர், வீரானந்தபுரம். 

குமராட்சி ஒன்றியம் :(36) 

                  ஆட்கொண்டநத்தம், சி.அரசூர், ம.அரசூர், அத்திப்பட்டு, செட்டிக்கட்டளை, எடையார், எள்ளேரி, கருப்பூர், கீழஅதங்குடி, கீழபருத்திகுடி, மேலபருத்திகுடி, ம.கொளக்குடி, குமராட்சி, கூடுவெளிச்சாவடி, மாதர்சூடாமணி, மெய்யாத்தூர், முள்ளங்குடி, நலன்புத்தூர், நந்திமங்கலம், நெடும்பூர், நெய்வாசல், ம.உடையூர், பரிவளாகம், ம.புளியங்குடி, டி.புத்தூர், ருத்திரச்சோலை, சர்வராஜன்பேட்டை, சோழக்கூர், சிறகிழந்தநல்லூர், தெம்மூர், தெற்குமாங்குடி, வடக்குமாங்குடி, திருநாரையூர், வடமூர், வெள்ளூர், வெண்ணையூர். 

வாக்காளர்கள்

ஆண் - 93,009
பெண் - 86,624
மொத்தம் - 1,79,633
 

வாக்குச்சாவடிகள்

மொத்தம் : 216 

தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் :

கடலூர் உதவி ஆணையர் (கலால்) சி.வி.கேசவமூர்த்தி98424 05631

Sunday, February 27, 2011

காட்டுமன்னர்கோயில் சட்டமன்ற தொகுதி விபரம்

2


காட்டுமன்னர்கோயில்  சட்டமன்ற தொகுதி விபரம்:

வாக்காளர்கள்:
மொத்த வாக்காளர்கள்:179633ஆண் வாக்காளர்கள்:93009பெண் வாக்காளர்கள்:86624வாக்குச்சாவடிகள்: 212
தற்போதைய எம்.எல்..:
ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்)

தொகுதி எல்லைகள்:

காட்டுமன்னார் கோயில் தாலுக்கா இதுவரை வெற்றிகள்:
தேர்தல் நடந்தது: 11 முறை
தி.மு..: 5 முறை வெற்றி
காங்கிரஸ்: 2 முறை வெற்றி
இந்திய னித உரிமை ட்சி: 2 முறை வெற்றி
காங்கிரஸ் நாயப் பேரவை: 1 முறை வெற்றி
விடுதலைச் சிறுத்தைகள்: 1 முறை வெற்றி
குறிப்புகள்:
* 1962
ம் ஆண்டு தேர்தலில்தான் கட்டுமன்னார்கோயில் தொகுதி உருவானது.

*
கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த தொகுதி
.

*
சிதம்பரம் எம்.பி. தொகுதிக்குள்தான் காட்டுமன்னார்கோயில் ட்டசபை தொகுதி உள்ளடங்கி இருக்கிறது
.


*
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2006 தேர்தலில் முதன்முறையாக இங்கே வெற்றி பெற்றது
.

* 1991
தேர்தலில் இந்திய னித உரிமை ட்சி .தி.மு.. ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது
.

* 2001
தேர்தலில் .சிதம்பரம் தலைமையிலான காங்கிரஸ் நாயப் பேரவை தி.மு.. கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அந்த ட்சியின் வேட்பாளர் ள்லல்பெருமான் உதசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றார்
.

* 2006
தேர்தலில் .தி.மு.. கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் ட்சியின் எழுத்தாளர் விக்குமார் வெற்றி பெற்றார்
.வேட்பாளர்கள் யோடேட்டா:

2006
தேர்தல் முடிவு:
(
விடுதலைச் சிறுத்தைகள் வெற்றி) மொத்த வாக்காளர்கள்: 1,52,743 திவானவை: 1,11,245 வாக்கு வித்தியாசம்: 13,414வேட்பாளர்களின் எண்ணிக்கை: 8வாக்குப்பதிவு சதவீதம்: 72.83 ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்): 57,244 வள்ளல்பெருமான் (காங்கிரஸ்): 43,830 உமாநாத் (தே.மு.தி..): 6,556 செல்லக்கண்ணு (அகில இந்திய வள்ளலார் பேரவை): 902 வெற்றிக்குமார் (சுயேட்சை): 843 வசந்தகுமார் (பி.ஜே.பி.): 818 இதுவரை எம்.எல்..கள்:
2006
ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்)
2001
வள்ளல்பெருமான் (காங்கிரஸ் ஜனநாயக பேரவை
)
1996
ராமலிங்கம் (தி.மு..)

1991
ராஜேந்திரன் (இந்திய மனிதஉரிமை கட்சி)(.தி.மு.. ஆதவு
)
1989
தங்கராசு (இந்திய மனிதஉரிமை கட்சி
)
1984
ஜெயசந்திரன் (காங்கிரஸ்
)
1980
ராமலிங்கம் (தி.மு..)

1977
ராமலிங்கம் (தி.மு..)

1971
பெருமாள் (தி.மு..)

1967
சிவசுப்பிரமணியன் (காங்கிரஸ்
)
1962
கிருஷ்ணமூர்த்தி (தி.மு..)
ந்த கால தேர்தல் முடிவுகள்:
2001 (
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,59,810பதிவானவை: 1,00,140வள்ளல்பெருமான் (காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை): 55,444சச்சிதானந்தம் (காங்கிரஸ்): 38,927
*
காங்கிரஸ் நாயப் பேரவை தி.மு..வின் உதசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது
.

1996 (
தி.மு..வெற்றி)

மொத்த வாக்காளர்கள்: 1,48,333பதிவானவை: 1,07,391ராமலிங்கம் (தி.மு..): 46,978இளைய பெருமாள் (இந்திய மனித உரிமை கட்சி): 37,159

1991 (
இந்திய மனிதஉரிமை கட்சி வெற்றி)

மொத்த வாக்காளர்கள்: 1,36,540பதிவானவை: 95,251ராஜேந்திரன் (இந்திய மனிதஉரிமை கட்சி): 48,103வெற்றி வீரன் (பா...): 21,785
* 1991
தேர்தலில் இந்திய னித உரிமை ட்சி .தி.மு.. ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது
.

1989 (
இந்திய மனிதஉரிமை கட்சி வெற்றி)

மொத்த வாக்காளர்கள்: 1,23,447பதிவானவை: 79,791தங்கராசு (இந்திய மனிதஉரிமை கட்சி): 30,877ராமலிங்கம் (தி.மு..): 27,036

1984 (
காங்கிரஸ் வெற்றி)

மொத்த வாக்காளர்கள்: 1,09,718பதிவானவை: 87,442ஜெயசந்திரன் (காங்கிரஸ்): 45,928தங்கசாமி (தி.மு..): 41,796

1980 (
தி.மு.. வெற்றி)

மொத்த வாக்காளர்கள்: 1,05,613பதிவானவை: 74,916ராமலிங்கம் (தி.மு..): 44,012மகாலிங்கம் (சி.பி.எம்.): 29,350

1977 (
தி.மு.. வெற்றி)

மொத்த வாக்காளர்கள்: 1,04,851பதிவானவை: 70,200ராமலிங்கம் (தி.மு..): 26,038ராஜன் (.தி.மு..): 19,991

1971 (
தி.மு.. வெற்றி)

மொத்த வாக்காளர்கள்: 83,360பதிவானவை: 65,430பெருமாள் (தி.மு..): 32,847குப்புசாமி (ஸ்தாபன காங்கிரஸ்): 29,551

1967 (
காங்கிரஸ் வெற்றி)

மொத்த வாக்காளர்கள்: 79,560பதிவானவை: 65,260சிவ சுப்பிரமணியன் (காங்கிரஸ்): 30,521கோவிந்தராசு (தி.மு..): 30,387

1962(
தி.மு.. வெற்றி)

மொத்த வாக்காளர்கள்: 78,512பதிவானவை: 61,027கிருஷ்ணமூர்த்தி (தி.மு..): 27,706வகீசம் பிள்ளை (காங்கிரஸ்): 27,௫௯௯