Saturday, December 31, 2011

காட்டுமன்னார்கோவில் மருத்துவமனையில் பரபரப்பு

1

காட்டுமன்னார்கோவில்; சர்க்கரை நோய் மாத்திரை வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
 இங்கு  சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் குறிப்பிட்ட தினங்களில் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. கடந்த காலங்களில் வாரத்திற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய கிழமைகளில் வழங்கப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் தட்டுப்பாடு இன்றி மாத்திரைகளை வாங்கிச் சென்றனர். தற்போது பற்றாக்குறை ஏற்பட்டதால் செவ்வாய், வெள்ளி ஆகிய இரு தினங்கள் மட்டுமே மாத்திரைகள் தரப்படும் என்று  அறிவிக்கப்பட்டது.  இதனால் நோயாளிகள் மாத்திரைகள் வழங்கும் தினங்களில் அதிக அளவு கூடுகின்றனர். வரிசையில் நின்று வாங்கும் போது மாத்திரைகள் தீர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் ஒருவரை ஒருவர் தள்ளி முட்டி மோதி போட்டி போட்டுக் கொண்டு மாத்திரை வாங்க முற்படுகின்றனர்.

இதனால் ஒவ்வொரு வாரமும் மாத்திரைகள் வழங்கும் தினங்களில் மாத்திரை வழங்கும் இடத்தில் பரபரப்பும், பதற்றமும் நிலவும் ஏற்படுகிறது.
 தள்ளு முள்ளு சம்பவங்களால் வயதானவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே  மாவட்ட நிர்வாகம் மாத்திரைகளை தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

1 comments:

Post a Comment